Thursday, September 21, 2006

மாவீரத்தாய்

கருவறையில் இருக்கும்போது
களவாய் பேசியவள்.
கைகளில் தவழும் போது
கனிவாய் பேசியவள்.
காளையாக திரிந்த போது
கண்டிப்பாய் பேசியவள்.
இன்றும்.............
கனக்க பேச வேண்டும்.
கட்டி அணைக்க வேண்டும்.
முத்தம் பொழிய வேண்டும்.
காத்திருக்கிறாள்...
காவல் தெய்வங்களின்
கல்லறைகள் முன்னால்.
வீரக்கண்மணி ஒரு தடவை
விழித்து பார்க்க மாட்டானா என்று......

Monday, September 11, 2006

இது ஒரு ஆரம்பம்தான் இதற்கு பின்னால் நிறைய உண்டு. சற்று பொறுத்திருப்போம்.