Tuesday, May 22, 2007

மனதார போற்றுவோம்.....!

காற்றோடு காற்றாகி
கலந்து போனவர்கள்!
        கடலென்ன தரையென்ன
        காவியங்கள் படைத்தவர்கள்!
விடுதலை வேள்விக்காய் தம்மை
விறகாய் எரித்தவர்கள்!
        வீறு கொண்டு தமிழினம் எழ
        வெடியாய் வெடித்தவர்கள்!
சாகும் தேதி தெரிந்தும்
சலனமின்றி திரிந்தவர்கள்!
        கணப்பொழுதும் பிரியாமல்
        கந்தகத்துள் வாழ்ந்தவர்கள்!
வாழத்துடிக்கும் தமிழினத்திற்கு புது
வரலாறு வகுத்தவர்கள்!
        சாவு என்ற ஏட்டிற்கு புது
        சரித்திரம் சேர்த்தவர்கள்!
மாற்றானின் பலத்தையெல்லாம்
மண்ணுக்குள் புதைத்தவர்கள்!
        எச்சமின்றி எதிரியை அழிக்க
        எரிமலையாய் பொங்கியவர்கள்!
பூவாய் வாழ்ந்து
புயலாய் எழுந்தவர்கள்!
        புன்முறுவலோடு புறப்பட்டு
        பூகம்பமாய் வெடித்தவர்கள்!
மண்ணுக்கான மரணம் என
மகிழ்வாய் ஏற்றவர்கள்!
        தலைவன் சொல்லே வேதமென
        தற்கொடையாளர் ஆகினர்!

-வார்த்தைகளுக்கள் வந்து அமர்ந்து விட முடியாத வாழ்க்கைதான் கரும்புலிகள் வாழ்க்கை. அந்த புனித தெய்வங்களின் நினைவாக எழுதியது இது. எவருமே நினைத்து பார்க்க முடியாத வீரம், சாவை தாமே சென்று அணைக்கும் அற்புதம். உத்தம வீர புருஷரை உள்ளத்தில் இருத்தி உளமார போற்றுவோம்!-